454                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தான்குறி மருண்டமை தலைவிஅவட்கு உணர்த்தலும்
     சேடி இறைவன் தீங்கு கிளத்தலும்
     ஊடி இறைவன் ஒழிதலும் ஒண்ணுதல்
     வறுங்களம் தன்னை வந்துகண்டு இரங்கலும்
     நறுந்துணர் அலர்க்குறி நாட்டம்உற்று இனையலும்
     உறுந்துயர் இகுளைக்கு உரைத்தலும் உறுந்துயர்
     இகுளை தணித்தலும் இறைவன்மேல் இகுளை
     குறிபிழைப்பு ஏற்றலும் கோதைமேல் தலைவன்
     குறிபிழைப்பு ஏற்றலும் அவள்குறி மருண்டமை
     அவள்அவற்கு இயம்பலும் ஆயிடைப் பாங்கி
     கொற்றவன் கொடுமை குறித்தவட்கு உணர்த்தலும்
     என்பிழைப்பு அன்றென்று இறைவிநோ தலும்என
     ஆறிரண்டு உடன்ஒன்று அல்லகுறி விரியே."

மா. அ. 52 

    "தாய்துஞ் சாமை ஊர்துஞ் சாமை
     நாய்துஞ் சாமை நகர காவலர்
     கடுகுதல் கங்குலின் உடுபதி உதித்தல்
     கூகை குறழல் குக்குடம் குரல்காட்டல்
     ஆகிய ஏழும் அல்லுக்குறிக்கு இறைவன்
     வருந்தொழிற்கு அருமை பொருந்துதற்கு உரிய."

மா. அ. 53] 

     இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்தல்:

 மின்அங்கு அலரும் சடைமுடி யோன்வியன் தில்லைஅன்னாய்
 என்அங்கு அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப்
 பொன்அங்கு அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
 அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே.

திரு 172 

 எனவும்,

     [மின் ஒளிர் சடைமுடிச் சிவபெருமானின் தில்லை அன்னாய்!
 முத்துப்போல் கொத்து அமைந்து பொன்போல் அலரும் புன்னைமரக்
 கூடுகளில் தனிமைத்துயர் உற்று அன்னங்கள் முழுதும் பொழுது
 விடியும் அளவும் துயிலாது வருந்தின. அவை என்ன துன்பம் உற்றனவோ]