அகத்திணையியல்-நூற்பா எண்-147                         455


 

     தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல்:

     அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாபூண்ட
     மணிஅரவம் என்றெழுந்து போந்தேன்-கனிவிரும்பு
     புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தேன் அணியிழாய்
     உள்ளுடை நெஞ்சினேன் யான்.

ஐந். ஐம். 50 

 எனவும்,

     ["தோழி! நெய்தல்நிலத் தலைவனின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின்
 மணிஒளிபோலும்" என்று கருதி இரவுக்குறிக்கண் சென்ற யான், கனியை
 விரும்பும் பறவைகளின் ஒலியையே கேட்டு மனம் உடைந்து  மீண்டு
 வந்துவிட்டேன்.]

     பாங்கி தலைவன் தீங்கு எடுத்துஇயம்பல்:

     கொடுமுள் மடல்தாழைக் கூம்புஅழித்த வெண்பூ
     இடையுள் இழுதுஒப்பத் தோன்றிப்-புடைஎல்லாம்
     தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
     செய்தான் தெளியாக் குறி.

ஐந். ஐம். 49 

 எனவும்,

     [கொழுவிய முட்களோடு கூடிய மடல்களை உடைய தாழையின் மலர்ந்த
 பூக்கள் தம் நடுவே வெண்ணெய் போல வழவழப்பான பொகுட்டுகள்
 தோன்றப்பெற்று நாற்புறமும் இனிய மணம் கமழும் நம்நெய்தல்நிலத்
 தலைவன் தெளிவில்லாதவாறு குறிப்புச் செய்துள்ளான்.]

     தலைவன் வந்து போதல்:

     நம்போல் எளியவர் இல்லைநெஞ் சேஇந்த நானிலத்தில்
     வம்புஓட வென்ற வனமுலை மாதற்கு மாளிகைஇன்று
     அம்போ ருகம்என்று அறிந்தும்வம் பேஎனை நீஅலைத்து
     வெம்போ தகம்திரி கங்குல்என் னோஇங்கு மேவியதே.

அம்பி. 223 

 எனவும்,