காமம் கடவ உள்ளம் உளைய யாம்வந்து காணும் பருவ மாயின் ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு யாங்குஎனப் படும்நுமது ஊரே தெய்யோ.
எனவும் வரும். இஃது ஐங்குறுநூறு 237
[காமம் செலுத்துகையினாலே மனம் வருந்த, அது பொழுது வீட்டில் இருக்கவேண்டிய யாங்களே உன்னைத் தேடிக்கொண்டு வரும் நிலை ஏற்படுமாயின், ஓங்கித் தோன்றும் மலைப்பகுதியிலே உன் ஊர் யாங்கு உள்ளது? என்பதை எங்களுக்குத் தெளிவாக உரைப்பாயாக.]
இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றல்:
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி தான்எம் மறந்தனள் ஆயினும் யாம்தன் உள்ளுபு மறந்துஅறி யேமே.
எனவரும். இஃது ஐங்குறுநூறு 298
[மழை பெய்யப் போதலைக் கார்மேகங்களான் அறிந்து மயில்கள் ஆடும் பக்கமலைகளுக்கு இடைப்பட்ட நல்ல ஊரில் உள்ள மெல்லிய இயல்பினை உடைய தலைவி தான் என்னை மறந்தாளாயினும், யான் அவளை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பதால் ஒரு போதும் அவளை மறந்துஅறியேன்]