அகத்திணையியல்-நூற்பா எண்-148,149                      465


 

     ஆற்றாமை - களவுப்புணர்ச்சியை அச்சம் காரணமாக விலக்கக்
                கருதினும், தலைவன்பிரிவு முதலிய கருதித் தலைவி
                ஆற்றாளாதல்.

 

     இவ்வரைதல் வேட்கை பற்றி நிகழும் மெய்ப்பாடுகளைத்
 தொல்காப்பியம்,

     "முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
     அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
     தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
     காதல் கைம்மிகல் கட்டுரை யின்மைஎன்று
     ஆயிரு நான்கே அழிவுஇல் கூட்டம்."

பொ. 271 

 என்ற நூற்பாவால் குறிப்பிடும்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                                    ந. அ. 163

   "அகத்துஎழும் அச்சமும் உவர்ப்பும்ஆற் றாமையும்
    மிகப்பயில் மூவகை வரைதல் வேட்கை."

மா. அ. 55 

148 

வரைதல் வேட்கையின் விரி

 521 பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
     அருமறை செவிலி அறிந்தமை கூறலும்1
     தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும்2
     தலைமகன் ஊர்க்குச் செலவு ஒருப் படுதலும்3
     பாங்கி இறைவனைப் பழித்தலும்4 பூங்கொடி
     இறையோன் தன்னைநேர்ந்து இயற்பட மொழிதலும்5
     கனவுநலிபு உரைத்தலும்6 கவின்அழிபு உரைத்தலும்7
     தன்துயர் தலைவற்கு உரைத்தல் வேண்டலும்8
     துன்புறு பாங்கி சொல்எனச் சொல்லலும்9
     அலர்பார்த்து உற்ற அச்சக் கிளவியும்10
     ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவியும்11