468                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 18 தலைமகனுடைய வரைவை ஏற்றுக்கொள்ளும்படி தன் தாய் தந்தை
   தமையன்மார் முதலிய குரவருக்கு அறிவிக்குமாறு தலைவி தோழியிடம்
   குறிப்பிடுதல்.

ஒத்த நூற்பாக்கள்

    "நாணுநெஞ்சு அலைப்ப விடுத்தற் கண்ணும்
     வரைதல் வேண்டித் தோழி செப்பிய
     புரைதீர் கிளவி புல்லிய எதிரும்
     வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்துப்
     புரைபட வந்த மறுத்தல்.....".

தொல். பொ. 107 

    "காமத் திணையின் கண்ணின்று வரூஉம்
     நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
     குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
     நெறிப்பட வாரா அவள்வயி னான." "" ""

108 

    "மறைந்துஅவற் காண்டல் தற்காட் டுறுதல்
     நிறைந்த காதலின் சொல்எதிர் மழுங்கல்
     வழிபாடு மறுத்தல் மறுத்துஎதிர் கோடல்
     பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
     கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
     இட்டுப்பிரிவு இரங்கினும் அருமைசெய்து அயர்ப்பினும்
     வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த்து அழுங்கினும்
     நொந்துதெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்
     பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
     வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும்
     கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
     மனைப்பட்டுக் கலங்கினும் சிதைந்தவழித் தோழிக்கு
     நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
     உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல
     வேற்றுவரைவு வரின்அது மாற்றுதற் கண்ணும் ....
     கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
     வெறியாட் டிடத்தும் வெருவின் கண்ணும்