எனவும்,
[மின்போன்ற தோழியே! முற்பிறப்பில் செய்த தீவினையால் என்
அழகிய வனப்பு எனக்கும் அவருக்கும் பயன்படாமல் போமாறு, பசலை
பாய்தலால் இவ்வாறு நாளும் குறைந்து வருகின்றதே. அவர் தந்த
காமவிருப்பத்தை மீட்டும் நீக்கிக் கொள்ளும் உபாயத்தை அறிய
முற்பிறப்பில் தவங்கள் செய்யாது போய்விட்டோமே!]
தன்துயர் தலைவற்கு உரைத்தல் வேண்டல்:
இன்னள் ஆயினள் நன்னுதல் என்றுஅவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர்சிலர் கொண்டே.
குறுந். 98
எனவும்,
[தோழி! நம் மனைக்கொல்லையில் நீர் நிரம்பிய பசிய புதரில் செருக்கி
வளர்ந்த மாரிக்காலத்துப் பீர்க்கம்பூக்கள் சிலவற்றைக் கொண்டு சென்று
"தலைவியின் நெற்றி இவ்வாறு பசலை பாய்ந்துவிட்டது" என்று அவரை
அடைந்து அவரிடம் கூறுவார் உளராயின், அக்கூற்றுப் பெரும்பயன் தரும்.]
பாங்கி நின்குறை நீயே சென்று உரை என்றல்:
தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாம்ஆ தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்