சுளைஆர் பொழில்துவ ரைத்தொண்டை மான்கப்பல் சூழ்துறைவா
இளையாள் வருந்துவது என்னைஎன் றாள்அன்னை யாம்இருந்து
விளையாடு சிற்றிலை வெண்தலைத் தெண்திரை வேலைஎற்றும்
வளையாலழித்ததுஎன்றாள் என்செய்வாள் பின்னைவாள் நுதலே.
கப்பல் 196
எனவும்,
[பலாக்கனிகளோடு கூடிய சோலைகளைஉடைய துவராபதி மன்னனான
தொண்டைமானுடைய கப்பல் என்ற ஊரைச்சார்ந்த கடல் துறைவனே!
என்தாய் தலைவியை "நீ வருந்தும் காரணம் என்ன?" என்று வினவினாள்.
"யாங்கள் தங்கி விளையாடிக்கொண்டு கட்டிய மணல்வீட்டைக் கடல் அலை
எற்றிய சங்குகள் அழித்ததனால் ஏற்பட்டவருத்தம்" என்று அவ்வாள் நுதலி
குறிப்பிட்டாள். பின்னர் யாது கூறல் வல்லாள்?]