மணிஅக்கு அணியும் பரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன் தில்லைஅன் னாள்திறத்துத்
துணியக் கருதுவது இன்றே துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே. திரு. 195
எனவும்,
[துறைவா! அக்குமணி யணிபவனாய், விடத்தைக் கண்டவுடன்
விண்ணோர்களால் பணியப்பட்டவன் ஆகிய சிவபெருமானின் தில்லையை
ஒப்பாள் திறத்துத் துணிந்து செய்யவேண்டியதனை இன்றே துணிவாயாக.
அயலார் பலரும் இவளை மகட்பேசி முலைவிலை அளிக்க
முன்வந்துள்ளனர்.]
வரைவு எதிர் உணர்த்தல்:
வழியும் அதுஅன்னை என்னின் மகிழும்வந்து எந்தையும்நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன் னேவயம் அம்பலத்துக்
குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலம்முற் றும்அறியக்
கெழிஉம் மவேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே.
திரு. 235
62