அகத்திணையியல்-நூற்பா எண்-151                          491


 

     தலைமகள் அறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்:

  தன்னையும் தோளையும் தோளில் நில்லாவரிச்சங்கையும் கண்டு
  உன்னை அங்குஓதும் உறுபழிநாணி உளம்கிடந்த
  அன்னையும் சேரியும் ஆயத்துஉள் ளாரும் அயலும்அன்றி
  என்னையும் கூடவெற் பாமறைத் தாள்என் இளங்கொடியே.

        அம்பி. 266 

 எனவும் வரும்.

     [வெற்பா! தன் மனத்தில் பெருமதிப்பிற்கு இலக்காக உள்ள தன் தாய்,
 சேரியோர், ஆயத்தவர், அயலார் இவரையன்றி என்னையும்கூட,
 நம்தலைவி, "உன்னைப்பழி தூற்றுவோமோ?" என்பதற்கு நாணித் தன்
 நிலையையும் மெலிந்த தோள் நிலையையும், தோளில் சங்குவளை
 நில்லாது கழலும் நிலையையும், யாங்கள் அறியாதபடி மறைத்துவிட்டாள்.]

     குறிபெயர்த்திடுதல்:

  வாம்மான் உகளும் மணிவரைச் சாரலில் யாம்வளர்த்த
  பூமா தவிமீது பூஞ்சிலம் பாபுல்ல நீநினையின்
  தேன்மாலை மென்குழை லார்செறி யாஅருஞ் சேண்நெறிக்கண்
  நீமாறி வேறுஒரு நீழல்உண் டாக நினைந்தருளே.

               அம்பி. 267 

 எனவரும்.

     இஃது இருவகைக்குறிக்கும் ஏற்குமாறு உணர்க.

     [அழகிய மலைநாடனே! மான்கள் தாவித்திரியும் மலைச் சாரலில், யாம்
 வளர்த்த தலைவியை நீ புல்லுதலை விரும்பினால், மகளிர் போக்குவரத்து
 இல்லாத அரிய தூரமான வழியிலே, இப்பொழுது நீ குறித்துக்கொண்டுள்ள
 குறியை விடுத்து வேறு ஒரு குறியிடத்தைக் கருதிச் சொல்வாயாக]

 

    பகல் வருவானை இரவு வருக என்றல்:

  களிறுஉற்ற செல்லல் களைவயின் பெண்மரம் கைஞ்ஞெரித்துப்
  பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோடு