அகத்திணையியல்-நூற்பா எண்-151                         493


 

  வெங்கைக் களிற்று மருப்பைப் பறித்துஅதன் வேர்அருந்தும்
  சிங்கத் தடஅரு விச்சிலம் பாஇன்று சேரின்நன்றே.

            அம்பி. 271 

எனவும்,

     [மதம் சொரியும் யானையின் தந்தங்களைப் பறித்து அதன்வேரை
 உண்ணும் சிங்கங்கள் சேரும் பெரிய அருவிகளை உடைய சிலம்பனே!
 இன்றுமுதல் திங்களும் கமலமும் போலும் முகத்தாள் உன்புயத்தைத்
 தழுவுமாறு திங்கள் சிறக்கும் இரவும், கமலம் சிறக்கும் பகலும் வருவாயாக.]

 

    பகலினும் இரவினும் அகல்இவண் என்றல்:

  சுழியாவருபெருநீர் சென்னிவைத்துஎன்னைத் தன்தொழும்பில்
  கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரம்தருமான்
  விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்து ஐயமெய்யே
  பழியாம் பகல்வரின் நீஇரவு ஏதும் பயன்இல்லையே.

             திரு. 261 

 எனவும்,

     [ஐய! சுழித்து வரும் கங்கையைத் தன் தலையில் வைத்து என்னைத்தன்
 அடிமைக்கண் பொருந்துமாறு அருள் செய்த சிற்றம்பலத்தான் கையில்
 உள்ள மான்போல விழிக்கும் தலைவி திறத்து நீ பகல் வரின் பழி
 ஏற்படும்; இரவில் வரின் அவளைக்காணும் வாய்ப்பு உனக்குக் கிட்டாது;
 ஆதலின் ஏதும் பயன் இன்று.]

 

    உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும்

     வாய்மையும் கூறல்:

  குறைவிற்கும்கல்விக்கும் செல்விற்குநின்குலத்திற்கும் வந்தோர்
  நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
  இறைவில் குலாம்வரை ஏந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
  உறைவில் குலாம்நுத லாள்விலை யோமெய்ம்மை ஓதுநர்க்கே.

     திரு. 266 

 எனவும்,