494                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [தலைவனாய் மேருவை வில்லாக வளைத்த சிவபெருமானின் ஏழு
 உலகும், வில்போன்ற நெற்றியை உடைய தலைவிக்கு விலையாகா
 எனினும், நீ அவளைவிரும்பும் இன்றியமையாமையையும் நின்
 கல்வியையும் செல்வநிறைவையும் குலப்பெருமையையும் மகட்பேச
 வந்தவர் பெருமையையும் மேம்பட்ட செய்ந்நன்றி அறிதலாகிய நீதியையும்
 நோக்கி, நினக்குத் தலைவியை மகட்கொடுத்தலுக்கு ஒருப்படுவர்.]

     

ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறல்:

  பற்றுஒன்று இலார்பற்றும் தில்லைப் பரன்பரங் குன்றில்நின்ற
  புற்றுஒன்று அரவன் புதல்வன் எனநீ புகுந்துநின்றால்
  மல்துன்ற மாமலர் இட்டுஉன்னை வாழ்த்திவந் தித்தல்அன்றி
  மற்றுஒன்று சிந்திப் பரேல்வல் லளோமங்கை வாழ்வகையே.

              திரு. 178 

 எனவும்,

     [பற்றற்றவர் பற்றும் சிற்றம்பலத்தானின் பரங்குன்றில் நின்ற
 சிவபெருமான் புதல்வனாகிய முருகனைப்போல நீ வந்து நின்றால், சிறந்த
 மலர்தூவி உன்னை வாழ்த்தி வழபடுவாராயின் நன்று. நினக்கு ஏதேனும்
 ஊறுசெய்ய மலைவாழ்நர் கருதுவர் ஆயின், தலைவிக்குப் பிறகு வாழ
 வழியில்லை.]

 

ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்:

  எழுங்குலை வாழையின் இன்கனி தின்றுஇள மந்திஅந்தண்
  செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
  உழும்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
  அழுங்குஉலை வேல்அன்ன கண்ணிகாநின் அருள்வகையே. 

      திரு. 250 

 எனவும்,

     [வாழைக்கனியை உண்ட இளமந்தி செழுங்குலையை உடைய
 வாழைநிழலில் உறங்கும் வெற்பனே! சிற்றம்பலத்தானை
 நினையாதவரைப்போல வருந்தும் என்வேற்கண்ணள் ஆகிய தலைவிக்கு நீ
 அருளுகின்ற வகைதான் யாதோ?]