எனவும்,
[பற்றற்றவர் பற்றும் சிற்றம்பலத்தானின் பரங்குன்றில் நின்ற
சிவபெருமான் புதல்வனாகிய முருகனைப்போல நீ வந்து நின்றால், சிறந்த
மலர்தூவி உன்னை வாழ்த்தி வழபடுவாராயின் நன்று. நினக்கு ஏதேனும்
ஊறுசெய்ய மலைவாழ்நர் கருதுவர் ஆயின், தலைவிக்குப் பிறகு வாழ
வழியில்லை.]
ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்:
எழுங்குலை வாழையின் இன்கனி தின்றுஇள மந்திஅந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழும்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
அழுங்குஉலை வேல்அன்ன கண்ணிகாநின் அருள்வகையே.
திரு. 250
எனவும்,
[வாழைக்கனியை உண்ட இளமந்தி செழுங்குலையை உடைய
வாழைநிழலில் உறங்கும் வெற்பனே! சிற்றம்பலத்தானை
நினையாதவரைப்போல வருந்தும் என்வேற்கண்ணள் ஆகிய தலைவிக்கு நீ
அருளுகின்ற வகைதான் யாதோ?]