எனவும்,
[மூங்கிலை வேலியாகஉடைய பலாத்தோட்டம் நிறைந்த மலைச் சரிவை
உடைய வெற்ப! நீ என்றும் தலைவிக்குச் செவ்வி எளியையாய்
இருப்பாயாக. சாரலிலே பலாவின் சிறிய கிளையிலே பெரிய பலாப்பழம்
தொங்குவதுபோல, இவள் சிறிய உயிரைப் பெரிய காமம் பற்றிக்
கொண்டிருக்கிறது. இவளுக்கு யாது நிகழுமோ? யார் அறியவல்லார்?
கனவு நலிபு உரைத்தல்:
அரவும் களிறும் அணங்கும் உலாவும் அருநெறிநீ
வரவும் குறியிடை வந்துஎதிர் புல்லவும் வல்லிநலம்
பரவும் பணிமொழி உள்ளம் படுக்கவும் பாயல்இடை
விரவும் கனவை நனவுஎன்று பாவம் விழித்தனளே.
அம்பி.276