496                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [பாம்பும் பேயும் தீண்டி வருத்தும் தெய்வங்களும் உலாவும் அரிய
 மலைவழியிலே நீ வருவது போலவும், குறிக்கண் வந்து தன்னைத்
 தழுவுவது போலவும், தலைவி மனத்தில் நினைத்துக்கொண்டே
 படுக்கையில் படுத்தாளாக, நினைப்பைப்போலவே கனவும தோன்றிற்றாக,
 அதனை நனவு என்று கொண்டு கண் விழித்து உண்மையை உணர்ந்து
 வருந்துவாள்ஆயினள்]

கவின் அழிபு உரைத்தல்:

  வரும்மந்த மாருதம் வண்தமிழ் நாறும் மலையவெற்பா
  தெருமந்த நெஞ்சில் திருஅனை யாள்திரு மார்புஅகலம்
  பொரும்அந்த மென்முலை புல்லப் பெறாதுபொன் போர்க்கஎன்போல்
  அருமந்த வண்ணம் எலாம்அவ மேஇன்று அழிகின்றதே.   அம்பி.277

 எனவும் வரும்.

     [மந்த மாருதமும் தமிழும் தோன்றும் மலைய மலைத் தலைவனே! மனம்
 சுழலும் திருமகள் போன்ற தலைவி உன் மார்பைத் தன்முலைகள்
 புல்லுதலைப் பெறாமையால், பசலைபாய அருமையான அவள் பொன்னிறம்
 இன்று பயன் அற்று அழிகின்றது.]

     இவற்றுள், வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப்
 பிறர்வரைவு உணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் பொய்த்தற்கும்,
 குறி பெயர்த்திடுதல் முதலாகப் பகலிலும் இரவிலும் அகல்இவண் என்றல்
 ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் மறுத்தற்கும், உரவோன் நாடும் ஊரும்
 குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறலாகிய ஒன்றும் கழறற்கும்,

     வரைவு எதிர் உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும்
 அறிவுறுத்தலும் ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறல் முதலாகிய ஆறும்
 ஆகிய ஒன்பதும் மெய்த்தற்கும் உரியவாம்

.                                   151