500                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்  

    "அகன்றணைவு கூறல் ஆழியொடு கேட்டல்
     ஆழியொடு புலத்தல் அன்னமோடு ஆய்தல்
     ஆழிக்கு உரைத்தல் ஆழி இழைத்தல்
     சுடரொடு புலம்பல் பொழுதுகண்டு மயங்கல்
     பையுள் எய்தல் பரிவுற்று உரைத்தல்
     அன்னமோடு அழிதல் வரவுஉணர்ந்து உரைத்தல்
     வருத்தம் கூறல் வருபதின் மூன்றும்
     திருத்திய ஒருவழித் திறனா கும்மே."

திருக்கோவை, மு,வீ. கள.20 

     முழுதும்-                                          ந. அ. 168

    "தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றலும்
     சிலைநுதல் பாங்கி செலவு விலக்கலும்
     நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும்
     கோமகன் செலவினை இகுளை கூறலும்
     பூமகள் நெஞ்சொடு புலந்து கூறலும்
     சேம வேலவன் நீடலின் சேயிழை
     காமம் மிக்க கழிபடர் கிளவியும்
     அன்னமென் னடைதுயர் பாங்கி ஆற்றலும்
     மன்னவன் வந்தமை மடந்தைக்கு உணர்த்தலும்
     நுண்ணிடைப் பாங்கி நொந்து வினாதலும்
     அண்ணலும் நொந்துஅவள் தன்னொடு வினாதலும்
     அணங்கினைப் பாங்கி ஆற்றுவித்து  இருந்தமை
     இணங்கக் கூறலும் என்னும்முந் நான்கும்
     ஒருவழித் தணத்தற்கு உரிய விரியே."

மா. அ. 60 

தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்:

 ஒடிக்கும் கரும்பின்உடுக்குலம்தோன்றும் எம்ஊர் வயின்போய்
 முடிக்கும் குறைஉண்டு நீஇசைந் தால்முழு முத்துஅணியும்