502                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [வண்டுகள் விரும்பும் கோதையை அணிந்த விளங்கிழைப் பாங்கியே!
 என்னை இங்கேயே  இருக்குமாறு உள்ளம் தடுத்தாலும் என் ஊருக்கு
 என்னைச் செலுத்தும் அளவுக்கு ஒரு காரியம்  உண்டு ஆதலின்,
 உங்களைப் பிரிந்து என்ஊருக்குச் சென்றாலும் நடுப்பகலின்கண் மீண்டுவந்து
 விடுவேன் ஆதலின் மனம் ஒடுங்கி நடுங்காதே.]

     தலைவனைப் பாங்கி விடுத்தல்:

  உமையாள் தலைவனை ஒன்றிய வாறுஇவள் உன்னைஅன்றி
  அமையா நிலைமை அறிந்தனை யேல்அய லேபுயலின்
  சுமையார் தடம்பொழில் சூடும்வெற் பாநின் துணிவைஎய்தி
  எமைஆள எண்ணினை யேல்இன்று நாளை எழுந்தருளே.

அம்பி. 282 

 எனவும் வரும்.

     [வானை அளாவிய பொழில்களை உடைய வெற்பா! பார்வதி
 சிவபெருமானைப் பொருந்தியதுபோல இவள் உன்னைஅன்றி உயிர் வாழ்தல்
 இயலாத நிலையை அறிந்தனை ஆயின், உன் ஊருக்குச்சென்று
 உன்செயலையும் முடித்து எம்மையும் காத்தலைக்  கருதுவையாயின், இன்றோ
 நாளையோ உன்செயலை முடித்து விரைவில் மீண்டு வருவாயாக.]

     இரவுநிலை உணர்த்தல்:

     இருகாலும் இல்லை வலவனுக் கேனும் எழுபரித்தேர்க்கு
     ஒருகால் ஒழிய ஒருகா லமும்இல்லை ஒண்சிலம்பா
     குருகுஆலும் வாரிதி ஏழும்எண் குன்றமும் சூழ்ந்துஇரவி
     வருகாலம் என்று கொல்அன்று நீயும் வருவதுவே.

அம்பி. 283 

 என இரவுநிலை உணர்த்தலும் இதன்பாற்படும்.

     [சிலம்பா! சூரியனுடைய தேர்ப்பாகனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
 அவன் ஏழு குதிரைகள் பூட்டிய தேருக்கு ஒரு சக்கரமே உண்டு. மேலும்
 அது இராக்காலத்தில் ஓடாது