508                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கையறு கிளவி:

  நன்றே இனியவர் நண்பு நமக்கும் அவர்க்கும்உயிர்
  ஒன்றே நினையில் உறையும்ஒன் றேஉயர்வெண்மணல்திண்
  குன்றே குலஅன்ன மேகுரு கேநம் கொடிநெடுந்தேர்
  அன்றே வருவல்என் றார்இருந் தேன்மெய் வருந்தியுமே.

அம்பி. 294 

 எனவும்,

     [மணற்குன்றே! அன்னங்களே! நாரைகாள்! தம்தேரில் ஊர் சென்று
 அன்றே மீண்டு  வருவதாகத் தலைவர் கூறினார். அச்சொல்லை நம்பி
 மெய் வருந்தியும் ஆற்றி இருந்தேன். "எனக்கும் அவருக்கும் உயிரும்
 ஒன்று; கூர்ந்து நோக்கின் உடலும் ஒன்று" என்று இருந்தேன்.  இனியவர்
 நட்பு நன்று!]

     கூடல் இழைத்தல்:

  முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்துஅரும்ப
  விளைக்கும் பசலை விழியிணை காட்ட விடாதஅண்டர்
  கிளைக்கும் தெரிவுஅரு கேதகை நீழல் கிளிஇருந்து
  வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண்கூடல்வளைக்கைகொண்டே.

அம்பி. 295 

 எனவும்,

     [பிறை நுதல் வேர்வு அரும்ப, விழிகள் பசலைபாய, தேவர்களும்
 காண்டல் இயலாத  தாழையின் நிழலிலே கிளி போன்ற தலைவி இருந்து
 கூடல் சுழியை வளைப்பாள்; சுழிப்பாள்;  பின் வளைக்கைகளால்
 அழிப்பாள். அவள் பெற்றி இது!]

     சூளுறவு பொய் என்றல்:

  புறம்தாழ் விரிசினைப் புன்னையங் கானல்மென் பூந்துறைவர்
  சிறம்தாழ் கருங்கடல்தெய்வமும் தீதுகொல்சிந்தைமென்நாண்