[வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய தலைவியே! நின்
முலைப்பசலையும் தனிமையும் நின் மனத்துயரும் நீங்கும்படி, நம்
தலைவர் தாம் போன காரியத்தை முடித்துத் தம் மணி நெடுந்தேரில் ஏறி
விரைவாக வந்துவிட்டார்.]
வந்தோன் தன்னொடு பாங்கி நொந்து வினாதல்:
வளரும் கறிஅறி யாமந்தி தின்றுமம் மர்க்குஇடமாய்த்
தளரும் தடவரைத் தண்சிலம் பாதனது அங்கம்எங்கும்
விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்று
ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே.
திரு. 193
எனவும்,
[மிளகை அறியாது உண்ட மந்தி மயக்கமுற்றுத் தளரும் மலைநாடனே!
மதி சூடிய சிவபெருமானுடைய புலியூரை ஒத்த தலைவி தன்
உடல்முழுதும் வெளுத்துப்போக விழுந்து எழுந்து விம்மி மெலிந்துள்ளாள்.]