518                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     மன்னவன் தூதாய் வந்ததுஇப் பொழுதுஎன
     மின்இடைக்கு இகுளை விருப்பின் சாற்றலும்
     இறைவி ஆற்றலும் இறையவன் புலம்பலும்
     வலவன் தன்னொடும் மழைமுகில் கணத்தொடும்
     குலமகன் வருத்தம் கொண்டு கூறலும்
     வளைமுழங் கலின்அவர் வரவுஅறி வுறுத்தலும்
     கிளையொடும் அதனைக் கிளிமொழி வாழ்த்தலும்
     வெற்றிவே லவன்தனை நினைந்தமை வினாதலும்
     கொற்றவன் தான்நினைந் தமைபின் கூறலும்
     கோல்தொடி தன்னைக் குறிப்பொடு நீங்காது
     ஆற்றுவித்து இருந்தமை ஆருயிர்ப் பாங்கி
     மொழிவதோடு இருபான் மேல்ஒரு மூன்றும்
     குறியுடை வரைவுஇடைப் பொருள்வயின் மன்னன்
     பிரிவதன் விரிவுஎனப் பேசினர் புலவர்."             மா. அ. 72

     என்பொருட் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றல்:

     குன்றம் கிடையும் கடந்துஉமர் கூறும் நிதிகொணர்ந்து
     மின்தங்கு இடை நும்மை யும்வந்து மேவுவன் அம்பலம்சேர்
     மன்தங்குஇடை மருது ஏகம்பம்வாஞ்சியம் அன்னபொன்னைச்
     சென்றுஅங்கு இடைகொண்டு வாடாவகைசெப்புதே மொழியே

திரு. 268 

 எனவும்,

     [தேமொழித் தோழியே! குன்றங்களைக் கடந்து சென்று உம்தமர் கூறும்
 செல்வத்தைக்  கொண்டு மின்னலை ஒத்த இடையையுடைய உம்மைவந்து
 சேருவேன். சிவபெருமான் வீற்றிருக்கும் திருவிடைமருதூர், திருஏகம்பம்,
 திருவாஞ்சியம் என்ற தலங்களை ஒத்த  தலைவியை வருத்தம் கொண்டு
 வாடாதபடி என்பிரிவு கூறி ஆறுதல்மொழி கூறுவாயாக.]