அகத்திணையியல்-நூற்பா எண்-155                         519


 

     பாங்கி நின்பொருட்பிரிவு உரை நீ அவட்கு என்றல்:

 கேள்ஏ வரையும்இல் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளைஅன்ன
 யாழ்ஏர் மொழியாள் இரவரி னும்பகல் சேறிஎன்று
 வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
 தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே.
                                                       திரு. 269

 எனவும்,

     [ஒப்பற்ற வள்ளலே! தனக்கு ஒப்பாரை இல்லாத சிவபெருமானின்
 புலியூரில் உள்ள  கிளியை ஒத்த மழலையையும் யாழை ஒத்த
 இனிமையையும் கொண்ட மொழிகளைஉடையை  தலைவி நீ இரவில்
 அவளைக் காணவரினும் பகலில் பிரிந்து விடுகிறாயே என்று ஏங்கி நிற்பவள்  ஆவாள். அவளை அமைதிஉறச் செய்து "காலம் தாழ்க்கேன்" என்று
 அவளிடம் கூறி  விடைகொண்டு நீ செல்வாயாக.]

     நீடேன் என்று அவன் நீங்கல்:

 மதிமுற் றியதுஅன்ன வாள்முகத் தாளை வரையவல்லே
 நிதிமுற்றி மீள்குவன் நீடநில் லேன்நெய்தல் நீலஉண்கண்
 நுதிமுற் றியகுழை நுண்ணிடை யாய்எதிர் கொண்டுநுங்கள்
 பதிமுற்றும் மங்கலம் பாடநின்று ஆடப் பரிசிலரே.
                                                     அம்பி. 305

     [காதளவும் நீண்ட கண்களையும் நுண்ணிய இடையையும் உடையாய்!
 உங்கள் ஊரவர் மங்கலம் பாடவும், பரிசிலர் ஆடவும், முழுமதி போன்ற
 ஒளியை உடைய முகத்தாளாகிய  தலைவியை மணப்பதற்கு விரைவாகப்
 பொருள் தேடிக்கொண்டு மீண்டுவிடுவேன். காலம் தாழ்க்கமாட்டேன்.]

பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவு உணர்த்தல்:

 நல்லாய்நமக்கு உற்றதுஎன் என்றுஉரைக்கேன் நமர்தொடுத்த
 எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர்இறைஞ்சும்