எனவும்,
[மடநெஞ்சே! விடத்தைக் கழுத்துக்கு அணியாகக் கொண்டு்
தேவர்களுக்கு மருந்தும் அமுதமும் ஆகிய சிவபெருமானுடைய தில்லையை
வாழ்த்தும் தலைவன் தன் கடமையை முற்றச் சென்று நம்மை இவ்வாறு
துன்புறுத்துவனாயின், நமக்கு வாழும் வகை ஒன்றும் இன்று.]
பாங்கி கொடுஞ்சொல் சொல்லல்:
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்
கதும்எனப்போக்கும் நிதியின் அருக்கும்முன்னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கம்ஓர் மூன்றுஉடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப்பாவைக்கு என்னோவந்தவாறு என்பர் ஏந்திழையே.
திரு. 275