526                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     வலம்புரி கிழத்தி வாழ்த்தல்:

 மால்வண்டுஎன மன்னிவாணன் தென்மாறைமன்னன்புகழே
 போல்வண் தமிழ்மன்னர் போற்றவிளங்குகபொன் கொழிக்கும்
 கால்வண்டல் வைகைக் கரைமல்கு மல்லிகைக் கான்முகையின்
 மேல்வண்டு இருந்தது போல்கரு மாமுக வெண்சங்கமே.
                                                     தஞ்சை 278

 எனவும்,

     [பொன் கொழிக்கும் வண்டலைஉடைய வைகைக் கரைக்கண்
 பூத்துச்சிறக்கும் மல்லிகைமொட்டில் வண்டு இருந்தாற் போலக் காணப்படும்
 கரிய முகத்தை உடையவெண்சங்கு, திருமால் கையில் இருக்கும்
 பாஞ்சன்னியத்தைப் போலப் பெருமையுற்று, வாணன் புகழ்போலத்
 தமிழ்மன்னர் போற்றும் புகழோடு விளங்குவதாகுக.]

     தலைமகன் வந்துழிப் பாங்கி நினைந்தமை வினாதல்:

 கடம்தந்த வெங்கைக் களிற்றுவெங் கானம் கடந்துசென்று
 தடம்தந்த தாமரைத் தண்புனல் நாட்டுத் தடங்கடல்நீர்
 விடம்தந்து அமுதம் தரும்மட நோக்குஇவண் மேவமனத்து
 இடம்தந்து அறிவதுஉண் டோஒரு நாள்எம் இறையவனே.
                                                      அம்பி.324

 எனவும்,

     [தலைவ! யானை செறிந்த காடுகளைக் கடந்து சென்று நீ தங்கிய
 தாமரைத் தடாகங்கள் நிறைந்த புனல்நாட்டிலே, விடமும் அமுதமும்
 போலும் பார்வைகளை உடைய தலைவி இங்கு உன்னைப் பிரிந்து
 தனித்திருக்கும் நிலையை ஒரு நாளாவது நீ நினைத்தது உண்டோ?]

     தலைமகன் நினைத்தமை செப்பல்:

 கோவையை வென்றசெவ் வாய்க்கொடி யேபொருள்கூட்டஎன்னும்
 தேவையைமேற்கொண்டு தீவினையேன் சென்றசென்றஇடம்
 யாவையும் உங்கள் இளமரக் காவும் இழைத்தகுன்றும்
 பாவையும் நீயும் பரிமளச் சோலையும் பண்ணையுமே.

 எனவும்,                                              அம்பி. 325