எனவும் வரும்.
[பிறைநுதல் தலைவியை, உன் ஊரைக்காட்டியும், உன் குளிர்ந்த
மலையைக் காட்டியும், உன் மலையிலிருந்துவரும் நதியைக் காட்டியும், உன்
தேர் சென்ற புதுச்சுவட்டைக் காட்டியும், உன்னைக் கூடிய
சந்தனமரக்
காட்டினைக் காட்டியுமே துயரத்தை ஆற்றுவித்துக்
கொண்டிருந்தேன்.]
உரையிற் கோடலான், தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதலும்
வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
சிமையா டகவரைச் சேண்நெறிச் சென்றுஅருஞ்செய்பொருளுக்கு
உமையான் ஒழிந்துஅங் குறைந்த அந்நாளிங் குடனிருந்து
இமையா விழிக்கின்ற இத்துணைப் போதினும் என்னைஅன்றி
அமையா அணங்கின் அணங்கைஎவ் வாறுஇருந்து ஆற்றினையே.
அம்பி.327
[உச்சியைஉடைய மேருமலைபோலும் மலைப்பக்கத்தே நீண்ட தொலைவு
சென்று பொருள் தேடுவதற்காக உம்மைப் பிரிந்து அங்குத் தங்கிஇருந்த
நாள்களில் எல்லாம், இங்குப் பெரும்பாலும் என்னுடனேயே இருந்து,
இமைத்துப் பின்