"வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை." " 194
இவ்விதிகளால் தலைவன் வினைமுற்றிய பிறகே தலைவியின் நினைவு மேலிட்டுச் சுரத்திடைக் காலம் தாழ்த்தாது மீண்டு வருதலை விரும்புவான் என்பதும், மீட்சிக்குப் பாகன் மிகவும் உதவுவான் என்பதும் கொள்க.