203


 

     ஆங்க என்னும் உரையசை ஈண்டு அகரம் தொக்கு நின்றது.       50

ஒத்த நூற்பா

     முழுதும்-                                          ந. அ. 54

                                                            50

 கற்பின் வகை

         

 423 களவின் வழிவந்த கற்பும் பொற்புஅமை
     களவின்வழி வாராக் கற்பும் என்றாங்கு
     முற்படக் கிளந்த கற்புஇரு வகைத்தே.

     இது நிறுத்த முறையானே கற்பின் பாகுபாடு கூறுகின்றது.

     இ-ள் : மேல் கூறிப் போந்த கற்பு களவிற்புணர்ச்சி வழியான் வந்த
 கற்பும், களவிற்புணர்ச்சிவழியான் வாராக் கற்பும் என இரண்டு பகுதியினை
 உடைத்தாம் என்றவாறு.

     களவின் வழிவந்த கற்பினை முற்கூறினார், அதனது சிறப்பு நோக்கி.  51

 விளக்கம்

     நிறுத்தமுறை-இவ்வியல்24-ஆம் நூற்பா

ஒத்த நூற்பா

     முழுதும்-                                          ந. அ. 55
                                             

                                                            50

கற்பின் புணர்ச்சி வகை

 424 குரவரின் புணர்ச்சி வாயிலின் கூட்டம்என்று
     இருவகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி.

    இது கற்பின்புணர்ச்சி இத்துணைத்து என்கின்றது.