100                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 எல்லாவற்றினும் பெரிதாகிய திணை ஆதலின் பெருந்திணை ஆயிற்று;
 என்னை? எண்வகை மணத்தினுள்ளும் கைக்கிளை முதல் ஆறுதிணையும்
 நான்கு மணம் பெறத் தான் ஒன்றுமே நான்குமணம் பெற்று நடத்தலான்
 என்பது                                                       4

விளக்கம்

      கைக்குடை - சிறியகுடை; கைஏடு - சிறிய ஏடு; கை வாய்க்கால் -
 சிறிய வாய்க்கால்; கைக்கிளை என்பதற்குப் பெருமை இல்லாத தலைமக்கள்
 கிளைமை என்று எடுத்துக காட்டுக்களுடன் பொருள்கொள்பவர்
 உரையாசிரியர். கைக்கிளை என்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை என்று
 பொருள்கொள்பவர் நச்சினார்க்கினியர்.

     எண்வகை மணங்களாவன - அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம்,
 யாழோர்கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்பன.
 இவற்றுள் அறநிலை முதலிய நான்கும் பெருந்திணைக்கும், யாழோர் கூட்டம்
 ஒன்றும் ஐந்திணைக்கும், ஏனைய மூன்றும் கைக்கிளைக்கும் உரியன;

     "முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
     பின்னைய நான்கும்பெருந்திணைபெறுமே"
         தொல்.பொ.105

 என்பதனால்.

     எழுதிணையுள் பெருந்திணை ஒன்றுமே, எண்வகை மணங்களுள்
 நால்வகை மணங்களுக்கு உரிமைபூண்டு நிற்றலான் அப்பெயர்த்து ஆயிற்று.
 இக்கருத்து உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஆகிய இருவருக்கும் உடன்
 பாடாம்.

     ஒத்த நூற்பாக்கள்

     

     "கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
     முற்படக் கிளந்த எழுதிணை என்ப"
              தொல். பொ. 1

     "மலர் தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
     அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
     பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும்."
              ந. அ 1