98                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தண்டமாவது-ஒழுக்கநெறியிலும் வழக்காடுதலிலும் தவறு செய்பவர்களை
 நல்வழிப்படுத்துவதற்காக நீதிநூல்களில் கூறியவாறு ஒறுத்தலைச் செய்து
 மீண்டும் நன்னெறிக்கண் நிற்கச்செய்தல்.

     இன்பம் என்பது சிறப்பாகக் காம இன்பத்தையே குறிப்பதாம்.
 அறத்தாற்றில் ஈட்டிய பொருளான் இன்பம் துய்க்கப்படுதலும், அறம்
 பொருள் இன்பம் என்ற முறைவைப்பின் காரணமும் விளக்கப்பட்டுள்ளன.

ஒத்த நூற்பா

     அகத்ததும் புறத்ததும் ஆயிரு பகுதியின்
     மிகுத்ததும் ஆகி விரிந்தது பொருளே.              த. நெ. வி. 1
                                                              2

     அகமாவது இஃது என்பது

 375 அகம்எனப் படுவது வகைஒரு மூன்றனுள்
      இன்பம் என்னும் இயல்பிற்று ஆகி
      அகத்துநிகழ் ஒழுக்கம் ஆதல் வேண்டும்.

     இது, மேல் நிறுத்தமுறையானே அகப்பொருள் ஆவது இன்னது
 என அதன் இயல்பு கூறுகின்றது.

     இ-ள் : அகம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, மேல் கூறிப்
 போந்த அறம் முதலாகிய மூவகைப்பொருள்களுள் இன்பம் என்னும்
 இயல்பினை உடைத்தாகி, உள்ளத்தின்கண்ணே நிகழும்  ஒழுக்கமாதலை
 விரும்பும் ஆசிரியன் என்றவாறு.

     ஒத்தஅன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற கூட்டத்தில்
 பிறந்த இன்பம், அக்கூட்டத்தின் பின்னர், அவ்விருவரும் ஒருவருக்கு
 ஒருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய்,
 யாண்டும் உள்ளத்து