அணியியல் - உவமையணி்

111 

     வீரசோழியத்தில் இது எதிர்பொருளுவமை என்ற பெயரில்.

    "இதுபொருள் உவமையின்று இதுபொருள் தனிமையின்
     இதுவே நன்றெனின் எதிர்பொாருளுவமை".               வீர. உரை. 156 

 என்று குறிக்கப்பட்டுள்ளது.

    "மறுபொரு ளாம்பொருள் வந்துஒப்பு உரைத்தலே".        - தொ. வி. 333 

    "புகன்றுமுன் வைத்த பொருட்கு நிகர்வதோர்
     பொருள்பினும் வைப்பது மறுபொரு ளாகும்"           - மு. வி. பொ. 8 

    "ஒருபொருட்கு ஒருபொருள் உவமை யாக
     எடுத்துக் காட்டுவது எடுத்துக்காட் டுவமை
     ஆகும் என்மனார் அறிந்திசி னோரே."              - மு. வி. பொ. 36 

புகழுவமை

 நினைத்து உவமிக்கும் நிலையின் மற்று அதனைப் புனைந்து உவமிக்கும் புகழ்
 உவமை வருமாறு :

    "இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும்
     பிறைஏர் திருநுதலும் பெற்றது ; - அறைகடல்சூழ்
     பூவலயம் தாங்கும் அரவின் படம்புரையும்,
     பாவை! நின் அல்குல் பரப்பு"

 என வரும்.

     [உபமானமாகக் கூறப்படும் பொருளுக்கு அடைகள் தந்து அதனை மாத்திரம்
 புகழ்ந்து கூறுவது புகழ் உவமையாகும். "சிவபெருமான் இவ்வுலகைத் தாங்கும்
 ஆதிசேடனுடைய படத்தை உன் அல்குல் ஒத்திருக்கிறது" - என்ற தலைவன்
 நயப்புரையில், உபமானமாகிய பிறை - இறையோன் சடைமுடி மேல் எந்நாளும்
 தங்கும் பிறை எனவும், அரவு-அறைகடல்சூழ் பூவலயம் தாங்கும் அரவு எனவும்
 புகழப்பட்டிருத்தலின் இது புகழ் உவமையாகும்.