நெகிழ்தல் - அறுதல்; நிறைகடாம் - நிறைந்த மதம்; சிந்தல் - பொழிதல்; கந்தம்
- தறி; மலைதல் - சீறுதல்; நிலவுதல் - பொருந்துதல்; கவடு - புரோசைக்கயிறு;
அசைதல் - பரிதல்.
இனித் தென்றல்மேல் செல்லுங்கால், நளி-பெருமை; தடம் - பொய்கை; அல்லி -
பூ; கள் - தேன்; நெகிழ்தல் - சோர்தல்; நிறை-ஒழுக்கம்; சிந்தல் - அழித்தல்; கந்தம்
- விரை; அலைதல் - நரலுதல்; நிலவுதல் - நெருங்குதல்; கவடு - மலைக்கொம்பு;
அசைதல் - அலைதல்,
[சொற்களைப் பிரித்துச் சிலேடை கொள்வது பிரிமொழிச் சிலேடை. இப்பாடல்
பிரிமொழிச் சிலேடை உவமையாய் யானைக்குத் தென்றல் உவமையாயினவாற்றைக்
குறிப்பிடுவது காண்க.
"புரந்தசொற் பொருவையும் பொருளையும் ஒன்ற
இரண்டையும் சிலேடித்து இசைப்பது சிலேடை" -வீர. உரை. 156]
அதிசய உவமை வருமாறு :
நின்னுழையே நின்முகம் காண்டும்; நெடுந்தடம்
தன்னுழையே தன்னையும் காண்குவம் - என்னும்
இதுஒன்று மேயன்றி வேற்றுமை உண்டோ,
மதுஒன்று செந்தா மரைக்கு-"
என வரும்.
[உயர்வு நவிற்சியாக உவமையைப் பொருளொடு புணர்த்துக் கூறுவது அதிசய
உவமையாம்.
"உன்னிடத்து உன்முகம் காணப்படுகிறது. தடாகத்தில் தாமரை காணப்படுகிறது.
இவ்வாறு இருக்கும் இடத்தால் ஏற்பட்டுள்ள வேறுபாடேயன்றி, உன் முகத்திற்கும்
தாமரைக்கும்
17-18