எனவும், ஆண்பாலோடு பெண்பாலும், உயர்திணைப் பன்மை பாலோடு அத்திணை
ஒருமைப்பாலும் மயங்க உவமிப்பினும் அவை தத்தம் உவமேயங்களைச சிறப்பித்து
வந்தமையால் வழுவாகாது இலக்கணம்ஆம் எனவும் கொள்க.
உவமேய அடைக்கு உபமான அடை குறையப் புணர்ப்பினும் பயப்பாடு உடைத்தாய
வந்தன வந்துழிக் காண்க.
[தான் சென்ற மரக்கலம் கவிழ்ந்துவிட்டதனால் தான் மாத்திரம் உயிர்
உய்ந்துபோன மீகாமனைப்போலத் தன் துயரத்தைக் களைவார் பிறர் இன்றித்
தனிப்படர் உழந்து வருந்தும் தலைவியாகிய என் நிலைமையைக் கண்ணால் கண்டு
வைத்தும், "உன்னைப் பிரிந்து செல்லேன் என்று கூறாமல் இருக்கிறாயே" - என்ற
பகுதியில் நாய்கன் என்ற ஆண்பாற் பொருள் தலைவியாகிய பெண்பாற் பொருளுக்கு
உவமை ஆயிற்று.