[ஒரு பொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்தும், உருவகம் செய்வதற்கு ஏலாப் பெற்றிகளை எடுத்துரைப்பது விரூபகமாகும், விரூபகம் - உருவகம் செய்தற்கு ஏலாதது. அம்புயம் மதிக்குத் தோற்கும்; குளத்தில் தங்கும்; முள் தங்கிய தண்டின்மேல் மலரும்; பகலில் மலர்ந்து இரவில் கூம்பும். ஆனால் இப்பெண்ணின் முகத்தாமரை மதிக்குத் தோற்காது; குளத்தில் தங்காது; முள் நிரம்பிய தண்டின்மேல் மலராது; பகல் இரவு என்ற இருபோதும் அழகாக மலர்ந்து காணப்படும் - என்ற இப்பாடலில், முகத்தைத் தாமரையாக உருவகம் செய்து தாமரைக்கு உள்ள குறைபாடுகள் முகத்திற்கு இல்லை என்று விளக்கியமை காண்க.
இது தெற்றுருவகம் எனவும் பெயர் பெறும்.
"எஞ்சிய பண்பில் இயையினும் ஓழிதொழில்
செஞ்சொலால் கிளப்பது தெற்றுரு வகமே." - வீ. உரை. 160
இது விரோத உருவகம் என்றும் வழங்கப்படும்.
(விருத்த உருவகம்) - மா. அ. 120]
சமாதானவுருவகம்
பாங்கினது உருவகப்படுத்தி அது பாங்கு இலாத் தீங்கு தரல் பிறிதின் எனச் செய்யும் சமாதான உருவகம் வருமாறு:
"கைகாந்தள், வாய்குமுதம், கண்நெய்தல், காரிகையீர்!
மெய்வார் தளிர், கொங்கை மென்கோங்கம் - இவ்வனைத்தும்
வன்மைசேர்ந்து ஆவி வருத்துவது, மாதவம்ஓன்று
இன்மையே அன்றோ எமக்கு?"
என வரும்.
[ஒரு பொருளைத் தனக்கு நன்மை செய்வதாக உருவகம் செய்து, அதுவே தனக்குத் தீங்கு தருவதாகக் கூறி, அங்ஙனம் தீங்கு தருவதற்கும் வேறு காரணம் உண்டு என்று கூறுவது |
|
|