166

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 சமாதான உருவகம். இப்பெண்களின் கை காந்தட்பூ; வாய் குமுதப்பூ; கண்
 நெய்தற்பூ; இவர் உடல் தளிராகும்; கொங்கை கோங்க மொட்டாகும். இத்தகைய
 மெல்லிய பூக்களும் தளிரும் வன்மை பெற்று என் உயிரை வருத்துவதற்குக் காரணம்
 யான் தவம்செய்யாமையேயாம் - என்று தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவழியும்
 சேட்படுக்கப்பட்ட தலைவன் தனக்குள் கூறிக்கொள்ளும் இப்பாடலில், கை முதலியன
 நலம் தரும் பூக்களாக - உருவகம் செய்யப்பட்டும், அவற்றால் துன்பம் ஏற்படுவதற்கு
 அவை காரணமல்ல; போகூழே காரணம் என்று கூறப்பட்டமை காண்க.

    "சீரிய உருவகம் செப்பி,ன் பயன்தரக்
     காரணம்கற் பித்தல் சமாதான மாகும்."                     -வீ..உரை.161 

     இதனை மாறன் அலங்காரம் நட்புருவகம் என்று குறிப்பிடும்.       -மா.அ.120] 

உருவகவுருவகம்

     உருவகம் செய்ததைப் பெயர்த்தும் வேறு ஒன்றா உருவகம் செய்யும் உருவக
 உருவகம் வருமாறு:

    "கன்னிதன் கொங்கைக் குவடாம் கடாக்களிற்றப்
     பொன்நெடுந் தோள்குன்றே புனைகந்தா, - மன்னவநின்
     ஆகத் தடம்சே வகமாக, யான்அணைப்பல்;
     சோகித்து அருளேல் துவண்டு"

 என வரும்.

     [உருவகம் செய்த ஒன்றனையே மீண்டும் உருவகம் செய்வது உருவக
 உருவகமாகும்.

     தலைவனை ஆற்றுவிக்கும் பாங்கன் "கன்னயின் கொங்கை மலையாகிய
 களிற்றினை, உன் தோள்களாகிய குன்றுகளே கட்டுத்தறிகளாக, மார்பாகிய பரந்த
 இடமே யானை கட்டும் கூடமாக, அவனை நின்னோடு சேர்ப்பேன்; ஆதலின் உடல்
 துவள மனம்