என்பது ஒரு கூறு என்னும் பொருளது. இறைவனடி சேர்ந்தார் பிறவியாகிய கடலை
நீந்துவர்; சேராதார் பிறவியாகிய கடலை நீந்தார் - என்ற பாடலில், பிறவியைக்
கடலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப, இறைவனடியைத் தெப்பமாக உருவகம்
செய்யாமை காண்க.
அறிவு என்ற அங்குசத்தால் ஐம்பொறியையும் அடக்கி வைத்துக்கொள்பவன்
மேல் உலகினை எய்தற்குரிய வாய்ப்பைப் பெறுவான் - என்ற பாடலில் அறிவை
அங்குசமாக உருவகம் செய்ததற்கு ஏற்பப் பொறிகளை யானைகளாக
உருவகம் செய்யாமை காண்க.