என வேறுபடவருதலும் அமைத்துக் கொள்க. பிறவும் அன்ன (26)
[மயில் கழுத்துப் போலக் காயா மலர்ந்தன. மன்னன் பிறந்த நாளிலே
அவன் திருவடிகளிலே பணிந்த முடிமன்னர்போலக் கோங்கங்கள் பலவும் பூத்தன.
அவர் பின் தலைப்பாகை தாங்கிச் சட்டை அணிந்து செல்பவர் போல மரவங்கள்
பூத்தன - என்னும் இப்பாடலில், நிறம் வடிவு ஆகிய பண்புபற்றிய உவமங்கள்
வந்துள்ளன.
நிலவே! வேங்கைப்பூ விழுந்த சிறிய பாறை புலிக்குட்டி போலக் காட்சி வழங்கும்
காட்டுவழியில் தலைவன் இரவுக்குறி கருதி வருங்கால் ஒளிவீசும் நீ நல்லை அல்லை -
என்ற பாடலில், புலிக்குருளை என்ற ஒரே உபமானத்திற்கு வேங்கைப்பூ விழுந்த
பாறை ஆகிய இரண்டு பொருள்கள் இணைந்து உபமேயமாகியவாறு காண்க;
"இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே" (தொல். பொ. 297) என்ற நூற்பாவில்
உம்மையால் ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்தே என்பது ஓத்தாகலின்.] 26