அணியியல் - பின்வருநிலை அணி

199 

    "அதுவே,
     சொற்பின் வருநிலை பொருட்பின் வருநிலை
     சொற்பொருட் பின்வரு நிலைஎன மூன்றாம்."                 - மா. 158 

    "உவமா னபபொருட் பின்வரு நிலையும்
     தவலருஞ் சிறப்பின் தான்வரல உளதே."                     - மா. 159 

    "பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின்
     முன்வரும் சொலபொருள் பின்னும் வருவதே."            -தொ. வி. 350 

    "பொழியப் பட்ட பாமுற் போந்த
     பெயரே பின்னும் பெயர்ந்து வரவது
     பின்வரு நிலையெனப் பேசப் படுமே."                 -மு. வீ. பொ. 62 

    "சொல்லும் பொருளும் சொல்லொடு பொருளும்
     வாக்கியப் பின்னரும் வருவது பின்வரு
     விளக்கது மூன்றா விரியும் என்ப."                             - ச.38 

    "முன்னமார் விளக்கணி மேவு தரும முடிவதனித
     தனியே வரின்பின் வருவிளக் காம்அது தானுஞ்சொலால்
     கனிவா கியபொரு ளால்அவ் விரலண்டுங் கதுவலால்
     இனிமூன்று எனவரும்."                                    - குவ. 38] 

     சொல் பின்வருநிலை அணி வருமாறு;

    "மால்கரி காத்துஅளித்த மாலுடைய மாலைசூழ்
     மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார், - மால்இருள்சூழ்
     மாலையின், மால்கடல் ஆர்ப்ப, மதன்தொடுக்கும்,
     மாலையின் வாளி மலர்"

 என வரும். மால் - மயக்கம், அரி, பெருமை, கருமை, மாலை - தொடையல்,
 இயல்பு, அந்தி, இடையறாமை.

     [மத மயக்கம் பொருந்திய யானையைக் காத்தளித்த திருமாலுடைய மாலை சூழ்ந்த
 பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிய இயல்பிளை உடையவர்மேல், கரிய
 இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் பெரிய கடல் ஆரவாரம் செய்ய மன்மதன்