222

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [கொடிய இடியோசையை எழுப்புவித்து அதற்குக் காரணமான கொடிய
 வெப்பத்தை உடைய பேரிடைய உட்கொண்டிருந்தாலும், மழைபெய்யும்
 கார்மேகத்தை யாவரும் விரும்புவர். உலகில் புகழை அழிக்கும் குற்றங்கள்
 பலவாகத் தம்மிடத்து வளரினம், மற்றவருக்குப் பொருளை வாரிக்கொடுக்கும்
 வள்ளன்மையுடையார் மேலதே புகழ் -

     என்ற இப்பாடலில், "வையத்து ........ புகழ்" என்ற பொதுப்பொருளால்
 "வெய்யகுரல்........... பேணுவரால்"  என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு.

    "அகம்அமர்ந்து ஈதலின்நன்றே முகன்அமர்ந்து
     இன்சொலன் ஆகப் பெறின்"                               - குறள் 92

     முதலிய சான்றோர் கருத்துக்கு மாறாக, வள்ளன்மை ஏனைய குணங்களுள்
 தீயவற்றைச் செகுத்துப் புகழ்தரும மாறுபாட்டை உலகின்மேல் வைத்து விளக்குவதால்,
 இதுஅ முரணித்தோன்றல் ஆமாறு காண்க. தீமைகளிடையே நன்மைத் தோற்றம்
 முரணித் தோன்றல் எனினும் ஆம்.]

     சிலேடையின் முடித்தல் வருமாறு :

    "எற்றே! கொடிமுல்லை, தன்னை வளர்த்துஎடுத்த
     முற்றிழையாள் வாட, முறுவலிக்கும்; - முற்றும்
     முடியாப் பரவை முழுங்குஉலகத்து,
     என்றும், கொடியார்க்கும் உண்டோ குணம்?"

 என வரும்.

     [கொடியாகிய முல்லையின் இயல்பு எத்தன்மைத்து! தன்னை வளர்த்துக்
 கொழுகொழும்பொடு இணைத்த தலைவி வாடி நிற்கவும் தான்தன் முல்லை
 முகைகளால் புன்முறுவல் பூக்கின்றனது. முழுதும் அழியாத கடல் முழங்கிக்
 கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் என்றும் கொடியாரிடத்தில் நற்குணம் காண்டல்
 அரிது -

     என்ற இப்பாடலில், "முற்றும்.....குணம்" என்ற பொதுப் பொருளால்
 "எற்றே......முறுவலிக்கும்" என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு,