228

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 என்று அளக்க ஒண்ணாததாய் உள்ளது; ஆனால் கடல் நீர் வடிவிற்றாக உள்ளது
 என்ற இப்பாடலில், கடல் சேனை என்ற இரு பொருள்களைச் சமமாகக் கூறிப் பின்
 கடல் என்ற ஒரு பொருளை அது நீர் வடிவிற்று என்று வேற்றுமை செய்தவாறு.]

     இருபொருள் வேற்றுமைச் சமம் வருமாறு:

    "சென்று செவிஅளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுளே
     நின்று அளவுஇல் இன்பம் நிறைப்பவற்றுள், - ஒன்று.
     மலர்இவரும் கூந்தலார் மாதர்நோக்கு; ஒன்று
     மலரிவரும் கூத்தன்தன் வாக்கு"

 என வரும். மலரி - ஊர். இது கூற்று.

     [மாதர் நோக்கும் கூத்தன் வாக்கும் இயல்பினான் சமமாவன. மாதர் நோக்குக்
 காதளவும் நீண்டு கடைசிவந்து என் உள்ளத்தில் எல்லையற்ற இன்பத்தை நிறைக்கும்;
 மலரி என்ற ஊரில் தோன்றி கூத்தன் என்ற புலவனின் வாக்குத் தன் சீரிய கூரிய
 தீஞ்சொற்களாலே என் காதுகளை அடைந்து என் மனத்தில் எல்லையற்ற
 இன்பம் பயக்கும் - என்ற இப்பாடலில்,

     இரு பொருள்களின் இயல்புகமளை "சென்று...........நிறைப்ப" என்று சமமாகக்
 கூறிப்பின் இரண்டனையும் மாதர்நோக்கு எனவும் கூத்தன் வாக்கு எனவும்
 வேற்றுமை செய்து காட்டியவாறு.]

     சமன் அன்றி மிகுதி குறைவான் கூற்றினான் வேறறுமை செய்தல் வருமாறு:

    "மலிதேரான் கச்சியும், மாகடலும், தம்முள்
     ஒலியும் பெருமையும் ஒக்கும்; - மலிதேரான்
     கச்சி படுவ கடல்படா; கச்சி
     கடல்படுவ எல்லாம் படும்"

 என வரும்.