"காரணம் காரியத் தோடு சார்த்தலும்
காரிய காரண ஒற்றும காண்டலும்
என்றிரு வகத்தாம் ஏது அணியே." - ச. 125
"காரண மான தொடுகா ரியத்தக் கழறுமதின்
பேரம் ஏது அணியாம்." - குவ. அ. 100
இவ்வொத்த நூற்பாக்கள 657, 658, 659 மூன்றற்கும் கொள்க.]
ஆக்கம் பற்றி வந்த கருத்தாக் காரகஏ வருமாறு :
"எல்லைநீர் வையகத்து, எண்இறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் ; -- முல்லைசேர்
தார்அலைத்து, வண்கொன்றைத் தார்அலைத்து, வண்டார்க்கப்
பூதலத்து வீழ்ந்த புயல்"
என வரும்.
[முல்லக் கொடியின் மகரந்தத்தை அளைந்து, மாலைபோலத் தொடர்ச்சியாக அமந்த பசிய கொன்றைப்பூங்கொத்தை அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்க, நிலத்தில் மழையாக வீழ்ந்த மேகம், கடல் சூழ்ந்த உலகிலுள்ள எண்ணற்ற எல்லா உயிர்களுக்கும் சொல்லுக்கும் அடங்காத பேரின்பத்தை விளைத்த - என்ற இப்பாடலில், புயல் ஆகிய கருத்தா பேரின்பம் தோற்றுதலாகிய ஆக்கத்தை தரையில் வீழ்தலாகிய காரகத்தால் வெளிப்படுத்தியவாறு.]
அழிவுபற்றி வந்த கருத்தாக் காரகஏ வருமாறு :
"கணிகொள் பொழில்அருவி கைகலந்து, சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து, -- தனிஇருந்தோர்
சிந்தை யுடனே உயிர்உணக்கும், தென்மலையம்
தந்த தமிழ்மா ருதம்"
என வரும்.
[தெற்கிலுள்ள பொதிய மலயில் தோன்றிய இனிய தென்றல் காற்று, கணிகளைக் கொண்ட பொழில்கள் சூழ்ந்த அருவி நீரைச் 33-34 |
|
|