முன்பிருந்த இளமை, களி, மயக்கம், காதல் என்பன அழிவுபட்டு இலவாயின செயல் மனம் ஒப்பற்ற நெறியைச் சேருவதற்கு உதவியதாகக் காரணம் கூறப்பட்டமை அழிபாட்டபாவமாதல் காண்க.] 39
மேலும் ஓர் ஒழிபு
659. தூர காரியமும்1 ஒருங்குஉடன் தோற்றமும்2
காரியம் முந்துஉறூவும் காரண நிலையும்3
உயுத்தமும்4, அயுத்தமும்,5 முத்தையோடு இயலும்.
இதுவும் அது.
இ-ள் : ஒருவழிக் காரணம் நிகழப் பிறிது ஒருவழிக் காரியம் நிகழ்தலும், காரண காரியங்கள் ஒருங்கு நிகழ்தலும், காரணத்தின் முன்னர்க் காரியம் நிகழ்தலும் காரணத்திற்கு ஏற்ற காரியம் நிகழ்தலும், காரணத்திற்கு ஏலாக்காரியம் நிகழ்தலும் ஆகிய இவ்வனைத்தும் முன்னை அலங்காரத்தோடு ஒத்து நடக்கும் என்றவாறு.
|
|
|