அணியியல் - மாறுபடு புகழ்நிலையணி

317 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 83

    "தேறும் தெரிவில் புகழ்ச்சி ஒன் றைப்பழிக் கப்பிறிது
     கூறிப் புகழுதல்."
                                          - வீ. 174 

    "உற்றதோர் பொருளினை மறைத்துறு பழியது
     பெற்றிட மற்றொரு பொருள்புகழ் பெற்றி
     பொற்புடை மாறு படுபுகழ் நிலையே."
                      - மா. 230 

    "கவிகரு தியபொருள் கரந்துமற் றதனை
     சிந்திப் பதற்குமற் றொன்றனை நினைத்துப்
     புகழ்வது மாறு படுபுகழ் நிலையே."
                 - மு. வீ. பொ. 99] 

     வரலாறு :

    "இரவுஅறியா, யாவரையும் பின்செல்லா, நல்ல
     தருநிழலும், தண்ணீரும் புல்லும் - ஒருவர்
     படைத்தனவும் கொள்ளா,இப் புள்ளிமான் பார்மேல்
     துடைத்தனவே அன்றோ துயர்?"

 என வரும்.

     [இப்புள்ளிமான் ஒருவரிடம் சென்று தனக்கு வேண்டியது ஒன்றனை இரத்தல்
 அறியாது; யாரிடத்தும் ஒரு பயன் கருதிப் பின்தொடர்ந்து செல்லாது; கிடைத்த
 தண்ணீரைக் குடித்து மரத்து நிழலில் தங்கும்; ஒருவர் தேடிவைத்த செல்வத்தையும்
 கொள்ளக்கருதாது.அஃது இவ்வுலகில் துன்பமின்றி வாழவில்லையா? - என்ற
 இப்பாடலில்,

     பிறர் பின் சென்று இரந்து பிறரிடம் ஒன்று பெற்று அவர் நிழலில் தங்கி
 உயிர்வாழும் இரவலனுடைய புன்மை, மானுடைய வாழ்க்கையைப் பாாராட்டிக்
 கூறுவதன் வாயிலாகப் புலப்படுத்தப் பட்டவாறு.]

    "போதும் தளிரும் புனைந்து, மணம்புணர்ந்து,
     சூதப் பணைதழுவித் தோன்றுமால், - மாதே 1
     பலமா தவங்கள் பயின்றதோ, பண்டு,இக்
     குலமா தவியின் கொடி"

 என்றாற்போல்வதூஉம் அது.                                          (57)