அணியியல் - பொது

35 

 வரலாறு :

    "என்னே ! சிலமடவார் எய்தற்கு எளியவோ ?
     பொன்னே ! அநபாயன் பொன்நெடுந்தோள் ;- முன்னே
     தனவேஎன்று ஆளும் சயமடந்தை தோளாம்
     புனவேய் மிடைந்த பொருப்பு"

 என வரும்.                                                          (4) 

விளக்கம்

     ஒரே பாடலில் பொருள் முற்றுப்பெறுவது முத்தகச் செய்யுள்.

     பொன்னே ! அநபாயன் தோள் சயமடந்தையின் தோள்களாகிய மூங்கில்கள்
 உரிமைகொண்டு மிடையும் மலைகளாம். அவை அச்சயமடந்தை அன்றி வேற்று
 மகளிர் தழுவுதற்கு எளிய அல்ல - என்று அநபாயன் தோள் வேட்ட தலைவு
 நெஞ்சழிந்து தோழியிடம் சொற்றது. பொன்னே ! பொருப்பு மடவார் எய்துதற்கு
 எளியவோ - எனப் பொருள் முற்றுப் பெற்றுள்ளமையின் இப்பாடல்
 முத்தகச் செய்யுளுக்கு எடுத்துக்காட்டு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 3, மு. வீ. செய்யுளணி 5

    "முத்தகம் தன்பொருள் ஓர்கவியின் முற்றும்"

- வீ. 178 

    "என்றும் அவற்றுள் எழுவாய் தனிநின்று
     சென்று பொருள்முற்றும் திடன்"

- மா. 67 

குளகச் செய்யுள்

 624. குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும்.
      இது குளகச செய்யுளது இயல்பு கூறுகின்றது.