உலகளந்ததும், கங்கையைத் தந்ததும், பரதற்கு அருளியதும், தேவர் உட்கொண்டதும், உத்தரை பெற்ற கரிப்பிண்டத்தைப் பரீட்சித்து என்ற குழந்தையாக்கியதும், கல்லினை அகலிகை ஆக்கியதும், திருமழிசைப்பிரான் பின் தொடர்ந்து போயினதும் அரங்கப்பெருமான் திருவடியே எனப் பாடல்கள் இரண்டும் ஒரே முடிக்குஞ்சொற் கொண்டமைந்தமையின் இவை குளகம்.