அணியியல் - சொல்லணி - மடக்கு

379 

     இதன்கண் ம,வ,ன என்ற மூன்றெழுத்துக்களே வருமாறு காண்க.]

     நான்கு எழுத்தான் வருவதற்குச் செய்யுள்:

    "யானக வென்னே யினையனா வாக்கின
     கானக யானை யனையானைக் - கோனவனைக்
     கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக்
     கன்னிக் கனையனைய வாய்"

 என வரும். ஏனைய வந்துழிக் காண்க.

     [என் ஏய் யான் நக இனையனா ஆக்கின கானக யானை அனையானை, கோன்
 அவனைக் கொல் நயனவேல் நக்க கோகனகக் கைக்கன்னிக் கனி அனையவாய் கன்னி.

     எத்தனையும் சிறிய யானே பரிகசிக்குமாறு இவ்வாறு தன்னுணர்வு அற்றவனாகக்
 காட்டானைடயை ஒத்த என் தலைவனைத் துன்புறுத்திய கொல்லும் வேல்களை ஒத்த
 கண்களையும், மலர்ந்த செந்தாமரையை ஒத்த கைகளையும் உடைய இப்பெண்ணின்
 கொவ்வைக் கனி அனைய வாய் புதுமை அழகுடைடயதாயுள்ளது - எனப் பாங்கன்
 தலைவியைக் கண்டு வியந்தவாறு.

      இதன்கண் ய, ன, க, வ என்ற நான்கெழுத்துக்களே வந்தவாறு.]

     இனம் மூவகைப்படும், வல்லினமும் மெல்லினமும் இடையினமும் என.
 அவை வருமாறு:

     வல்லினப்பாடல்

    "துடித்தடித்துத தோற்றத் துடுப்பெடுத்த கோட
     றொடுத்த தொடைக்கடுக்கை பொற்போற் - பொடித்துத்
     தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
     கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு"

 எனவும்,