என ஒற்றெழுத்து இன்றி வருதலும் கொள்க.
[அளி! நுமது புனலில் இவ்வரிவை அமுத இதழின் இகலும் குமுதம் மருவி நறவு
பருக வளரும் உருவம் உடையது உரை.
வண்டே! நீ பழகும் குளங்களில் இப்பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள்
போலத் தோற்றமளிக்கும் குமுத மலர்களில் ஒரு முறை மருவித் தேனைக் குடித்த
பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மை உடைய மலர் உண்டாயின் கூறுவாயாக - என்று
தலைவன்]