அணியியல் - மிறைக்கவி

399 

     வரலாறு :

    "மேரு சாபமு மேவுமே
     மேம மேயுண வாலமே
     மேல வாமவ னாயமே
     மேய னானடி சாருமே."

     [சிவபெருமானுக்கு மேருமலை வில்லாக மேவும்; ஆலம் உணவாக மேவும் ;
 அவன் பூதக்கூட்டம் மேம்பட்டு விளங்கும்; அத்தன்மையான் திருவடிகளைச்
 சார்வீராக.]

     இது குறட்டின் நடுவே 'மே' என்னும் எழுத்து நின்று, ஆரல்மேல்
 ஒவ்வோரெழுத்தாக நான்கு எழுத்து நின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து
 நின்று செய்யுள் முடிந்தவாறு காண்க.

    "மாதவா ! போதி வரதா ! வருளமலா !
     பாதமே யோத சரைநீ -- தீதகல
     மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த்
     தாயே ! யலகில்லா டாம்"

 இதன் வேறுபாடும் அறிந்துகொள்க.

     [மாதவனே ! போதிமரத்தடியில் அமர்ந்த மேலானவனே ! குற்றமற்றவனே ! உன்
 திருவடிகளை ஏத்தத் தேவரை நீ குற்றம் நீங்க அழிவில்லாத வீட்டு நெறியை
 அடையச செய்வாய். தாயே ! எல்லையற்ற வலிமை உடையாய் ! உன்னிடம் அன்பு
 நீங்காத சிறப்பை அருள்.

     அலகு இல் ஆடு ஆம் அமலா ! இன்று அன்பு அகலாச்சீர் அருள் - என்று
 பொருள செய்க.]

     ஆறு ஆரல் சக்கரம் வருமாறு:

    "தண்மலர் வில்லிதன் போரானதஞ்ச நமக்களித்த
     கண்மலர்க் காவிக் கெதிரா வனவன்று கரமளந்த