418

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     தலைவி ! ஒப்பற்ற இவர் இக்குறிஞ்சிநிலத் தலைவரோ? விஞ்சையர் உலகத்
 தலைவரோ? கிடைத்தற்கு அரிய தேவர் அமிழ்தத்தை ஒத்த இவர் இப்புனத்தை
 விட்டு நீங்காமல் மனம் தடுமாறிச் சுழலும் திறத்தை யாவர் அறிவார் - என்ற
 தோழி தலைவியிடம் தலைவன் குறைநயத்தலைச் சுட்டும் இப்பாடலில்,
 அருமருந்தன்னார் என்பதன் மரூஉ மொழியாய் "அருமந்தன்னார்" என வழக்காறு
 பற்றி வந்துள்ளமை வழுவமைதியாகும்.]                                   79

யதிவழுவும் அமைதியும்

 699. யதிவழு என்பது ஓசை அறுவழி
     நெறிபட வாரா நிலைமையது ; அதுவே
     வகையுளி யாயின் வழுவின்று ஆகும்.

 இதுவும் அது.

     இ-ள் : யதிவழு என்று சொல்லப்படுவது, ஓசை கொண்டு தளை அறுக்குமிடத்து
 அறுத்தற்கு அரிதாய் வேறுபட வரும் தன்மையதாம். அதுவே, வகையுளியாகப்
 பிரித்துக் கூறும் இடத்துக் குற்றம் இல்லையாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 113, 114

    "நசைதீர் யதிவழு நாடுகில் ஓசை
     இசைதர நிகழாது இழுக்குவ தாகும்."                         - மா. 311 

    "அதுவே,
     வழுவின் றாம்எனல் வகையுளிக் காகும்."                     - மா. 312 

     வரலாறு :

    "மாடு பயிலும் வரைஆளி, மால்யானைக்
     கோடுபுய்த்து உண்டுஉழலும் கொள்கைத்தாம் ; -- காடு