424

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     மலை என்பது இமயம் பொதியம் முதலாயின. யாறு கங்கை கங்கை காவிரி
 முதலாயின. நாடு பதினெண்பாடைக்கும் உரிய நிலங்கள்.

ஒத்த நூற்பாக்கள்

(முதலடி) தண்டி 119.

    "உலகிடங் காலம் கலையே நியாயம்
     ஆகம மலைவென்று ஆறுஒரு வகைஉள."                    - மா. 319 

    "ஒழுக்க நடையே உலகம தாகும்."                               - 320 

    "இடமது மலைநாடு யாறென மூன்றே."                            - 321 

    "சிறுபொழு தொடுபெரும் பொழுதெனக் காலம்
     அறுவகைத் தாமென அறைந்தனர் புலவர்."                      - 322 

    "பொருளும்இன் பமும்புணர் பொருட்டா கியநூல்
     அருளுமெண் ணான்கிரட் டியகலை அதுவே."                    - 323 

    "அளவையின் ஆயபல் பொருட்கமை வினைத்திறம்
     உளமுற மதித்துரைப் பதுவே நியாயம்."                         - 324 

    "அறம்பகர் முனுமத லாயின ஆகமம்.."                           - 325 

     வரலாறு :

    "தென்மலையின் மான்மதமும் சாமரையும், காமருசீர்ப்
     பொன்மலையின் சந்தனமும் ஆரமும், - பன்முறையும்
     பொன்னி வளநாடன் முன்றில் பொதுளுமே,
     மன்னர் திறைகொணர வந்து"

 எனவும்,

    "தண்பொருநைச் செங்கனகம், மாதங் கிரித்தரளம்,
     வண்கலிங்கம் தந்த வயப்புரவி, -- பண்பு
     மருவும் யவனத்து மால்யானை, சென்னி
     பொருநருக்கு வீசும் பொருள்"

 எனவும் மாலை இடமலைவும், ஆற்று இடமலைவும், நாட்டு இடமலைவும்
 முறையேகாண்க.