56

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     பிறிவார் குணமொன்ற தொன்றிற்கிடப்பன [மென்மையொன்றின்
     நெறிவார் குழலி சுகுமாரதை என்று நேர்ந்துரையே".            - வீ. 150 

    "ஆனா உலகிற் கரும்புகழ்க் காந்தி கொடைப்புகட்சி
     தானா முதாரம் பொருள்விளக் குஞ்செய்யுள் தான்புலனாம்
     தேனார்சொல் லன்றிப் பொருளாற் றெளியின் [பொருட்டெளிவாம்
     தானாடு சொற்பொருளிற் சுவைதோன்றின் தகுமின்பமே"        - வீ. 151 

    "ஆனா அழகினைக் காந்தியென் கின்றது அதுதமிழின்டுமே.
     நானா விதமாய் நடைபெற்றியலும் நனிபுகட்சி
     தானா மிடத்தினும் வார்த்தையின் கண்ணும் தலைசிறந்து
     தேனாய் விதர்ப்பருக் குங்கவு டர்க்கும் திறப்படுமே"         - வீ. 151 அ 

    "இன்பம் தெளிவு செறிவுசமன் இன்னிசையே
     நன்சொல் உதாரம் நவின்றவலி - மன்காந்தம்
     தையல்உய்த் தலில்பொருண்மை சாற்றும் சமாதியுடன்
     ஐயிரண்டும் வைதருப்பம் ஆம்"                             - மா. 80 

    "ஏனைக் கௌடமிவை ஈரைந் தொடுங்கூடா
     மானைப் பழித்த மதர்விழியாய் - நூல்நயந்திங்(கு)
     எண்ணியபாஞ் சாலம் இவைகட் கிடைப்பட்டு
     நண்ணியதோர் சால்புடைத்தாம் நன்கு".                       - மா. 81 

    "சொல்லாற் பொருளாற் சுவையுறலின் பந்தெளிவு
     ஒல்காப் பொருள்புலப்பா டொண்செறிவு - நல்லாய்
     எழுத்தோ ரினஞ்செறிதல் எல்லா எழுத்தும்
     வழுத்தீர்ந் துறல்சமனு மாம்".                                - மா. 82 

     "இன்னிசைய தின்னிசையாம் ஏய்ந்த உதா ரங்குறிக்கொள்
      சொன்னடையால் வேறுபொருள் தோன்றலாம் - நன்னுதால்
      வாய்ந்த தொகைமிக்கு வருதல் வலிகாந்தம்
      ஆய்தொன்ற னையுயர்த்தல் ஆம்".                         - மா. 83