"செய்யுட் பொருளைத் தெளியவிரித் தற்குரிச்சொல்
எய்துநடைத் துய்த்த லில்பொருண்மை - தையலாய்
ஓங்கும் சமாதி உபமேயத் தின்வினையை
ஆங்குவமைக் கேற்றுவதொன் றாம்".
- மா. 84
"சமாதி சிலீட்டம் ஆலேசம் சமதை
பொருட்டெளிவு இன்பம் புலன்சுகு மாரதை
உதாரம் காந்திமற்று ஒன்பதும் ஒன்றும்
வைதருப் பந்நெறி யாம்வழுத் திடினே".
- மு. வீ. செய்யுளணி 11
"அவற்றுள்,
ஒன்றன் பாலுண் டாகிய குணம்மற்று
ஒன்றன் பாலுள வாக உரைப்பது
சமாதி எனப்பெயர் சாற்றப் படுமே".
- 12
"சிலீட்டம் சொற்செறிவுடைய தாகும்".
- 13
"ஆலே சம்தொகை அதிகமா குதலே".
- 14
"எழுத்துநான் கடியுமொத் தியல்வது சமதை".
- 15
"பொருளா லறிவது பொருட்டெளி வாகும்"
- 16
"மொழிதரு முற்றிய மோனையைப் பெறுவன
இன்பம் என்மனார் இயல்புணர்ந் தோரே".
- 17
"உதாரம் ஈகையைப்புகழ்ந் துரைப்பதா மெனலே".
- 18
"பொருள்புலப் படல்புல னாமென மொழிப".
- 19
"வன்கணம் ஒழிதர வரும்சுகு மாரதை".
- 20
"பொருட்பொலி வால்புகழ்ந் துரைப்பது காந்தி".
- 21
- 15