66

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "செருமான வேற்சென்னி தென்உறந்தை யார்தம்
     பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும்,
     பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம்
     காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்"

 என வரும். இதனுள் வறுமை தீரக் கொடுப்பன் என்பது குறிப்பு. இவ்வுதாரம்
 இருவகைநெறியார்க்கும் ஒக்கும்.

     [உறையூரைக் கோநகராகக்கொண்டு ஆளும் வீரனாகிய சோழனுடைய முகத்தைக்
 காணும்வாய்ப்புப்பெற்ற பின்னர், இரவலருடைய கண்கள் இவ்வுலகில் வேறு எவரையும்
 மிடி தீரப்பொருள் பெறும் விருப்பினால் பாராவாம் - என்ற இப்பாடலில் சோழன்
 இரவலரைக் கண்டஅளவில் அவர் குறிப்பறிந்து அவர்தம் வாழ்நாள் இறுதிகாறும்
 மிடியின்றி வாழப் பொருள்நல்குவான் என்ற கருத்து குறிப்பாக அமைந்துள்ளமை
 காண்க.

     இவ்வுதாரம் மூன்று நெறியாருக்கும் ஒக்குமேனும் வைதருப்பத்தில் குறிப்புப்
 பொருள்சிறிதளவும், பாஞ்சாலத்தில் அதனின் சிறிது மிகுதியாகவும், கௌடத்தில்
 இன்னும் மிகுதியாகவும் காணப்படும் என்பது மாறன் அலங்காரம்.

    "காழில் கனிஉண் கடுவன் களங்கனியை
     ஊழிற் பருகி உருகுதிரு - மூழிக்
     களத்தாதி யைமதங்கா காமக் குழவி
     வளர்த்தா ரிடம்தேடு வாய்"

 என்பது தலைமகனுக்காக வாயிலாக வந்த பாணனிடம் தோழி வாயில் மறுத்து
 உரைத்ததாகும்.

     காலை மங்கலம் பாட வந்த யாழ்ப்பாணனே ! பரல் இல்லாதே முழுதும்
 மென்மையும்இனிமையும் உடைய அரம்பைக் கனியை அச்சமின்றி உண்ணாநின்ற
 கடுவன் அகத்து முழுதும்பரலாய்ச் சிறிது புறமென்மையும் அற்பச்சுவையுமுடைய
 களங்கனியையும் முறையேபோலப் பருகிஅதன் சுவைக்கும் உள்ளம் உருகும்
 திருமூழிக்களத்து முதல்வனைக் காமம் என்னும்