அணியியல் - குணவணி

69 

     உலகு ஒழுக்கு இறவா உயர்புகழ்க் காந்தம் வருமாறு :

    "ஒருபேர் உணர்வுடையேன் உள்நிறையும் தேய
     வருமே துறவுஎன்பால் வைத்த - ஒருபேதை,
     போதுஅளவு வாசப் புரிகுழல்சூழ் வாள்முகத்துக்
     காதுஅளவு நீண்டுஉலவும் கண்?

 என வரும்.

     [உணர்வுடைய என்னுடைய உள்ளத்து நிறையும் தேய, நிறைநீங்குதலை
 உண்டாக்கிய இளையாளது குழல் சூழ்ந்த ஒளி மிக்க முகத்தில் அமைந்த கண்கள்
 காதுகள் அளவும் நீண்டு பிறழும் இயல்பின - என்று தலைவன் தான் உற்ற
 வருத்தத்தைப் பாங்கனிடம் கூறிய இப்பாடலில், உலகியலில் நிகழும் செய்தியே
 மரபாக அமைந்த புனைந்துரையே அமைந்திருப்பதனைக் காணலாம்]

     இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :

    "ஐயோ! அகல்அல்குல் சூழ்வருதற்கு ஆழித்தேர்
     வெய்யோற்கு அநேகநாள் வேண்டுமால்; - கைபரந்து
     வண்டுஇசைக்கும் கூந்தல் மதர்விழிகள் சென்றுஉலவ,
     எண்திசைக்கும் போதாது இடம்"

 என வரும்.

     [இஃது என்ன வியப்பு! அகன்ற அல்குலைச் சூழ்ந்து சுற்றி வருவதற்குக்
 கதிரவனுக்குப் பல நாட்கள் ஆகும். இந்நங்கையின் செழித்த விழிகள் உலவி
 வருவதற்கு எட்டுத் திசைகளும் இடம் போதாவாம் - என்ற இப்பாடலில் உலக
 நடையினைக் கடந்த கற்பனை அமைந்திருப்பது காண்க.]

     தொகைமிக உரூஉம் தகைமிகு வலி வருமாறு :

    "செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கின் சீறடிப்பேர்ப்
     பொங்கரவ அல்குல் பெருகயல்கண் . செங்கனிவாய்க்